நீலகிரி | நெல்லியாளம் நகராட்சியில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை - ரூ.3.37 லட்சம் பறிமுதல்

By ஆர்.டி.சிவசங்கர்

பந்தலூர்: நெல்லியாளம் நகராட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் இன்று திடீர் சோதனை நடத்தினர். இதில், நகராட்சி தலைவர் சிவகாமி, துணைத் தலைவர் நாகராஜ் ஆகியோரிடமிருந்து கணக்கில் வராத ரூ.3,37,500 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

நீலகிரி மாவட்டம் நெல்லியாளம் நகராட்சி அலுவலகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தகவல் வந்தது. அதைத்தொடர்ந்து இன்று, லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி ஜெயகுமார் தலைமையில் லஞ்ச ஒழிப்பு காவலர்கள் நெல்லியாளம் நகராட்சி அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

இதில், நகராட்சி தலைவர் சிவகாமி, துணைத் தலைவர் நாகராஜ் ஆகியோரிடமிருந்து கணக்கில் வராத ரூ.3,37,500 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்கு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்‌. இதனால் நெல்லியாளம் நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE