காஞ்சிபுரம் | சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் கைது

By KU BUREAU

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 2 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். காஞ்சிபுரம் சிறுகாவேரிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜீவானந்தம் மகன் குலசேகரன்(26), ஒலிமுகமதுபேட்டை பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் ரித்தீஷ்(21), காஞ்சிபுரம் வெங்கட் ஆகியோர், 16 வயது சிறுமியிடம் நண்பர்கள் போல் பழகியுள்ளனர். பின்னர் மூவரும் அந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். இதனால் அந்த சிறுமி கர்ப்பம் ஆனார்.

இது தொடர்பாக அவரது தாய் காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதனைத் தொடர்ந்து குலசேகரன், ரித்தீஷ் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். வெங்கட்டை தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE