நாயை துரத்தியபோது விபரீதம்: ஹோட்டலின் 3வது மாடியிலிருந்து விழுந்து மாணவர் மரணம் 

By KU BUREAU

ஹைதராபாத்: ஹோட்டலில் நடந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட மாணவர், நாயை துரத்தும்போது மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.

ஞாயிற்றுக்கிழமை மாலை சாந்தாநகரில் உள்ள விவி பிரைட் ஹோட்டலின் மூன்றாவது மாடியில் பாலிடெக்னிக் மாணவர் உதய் குமார் (24) தனது நண்பரின் பிறந்தநாளைக் கொண்டாடினார். அப்போது நடைபாதையில் இறங்கியபோது, ​​அவர் அங்கு ஒரு நாயைக் கண்டுள்ளார்.

குமார் விளையாட்டுத்தனமாக நாயை துரத்தி சென்றுள்ளார். நடைபாதை முடிவடையும் போது, ​​நாய் வலதுபுறம் திடீரென திரும்பியது. ஆனால் குமாரின் கால்கள் தடுமாறி திறந்த ஜன்னல் வழியாக 3 வது மாடியிலிருந்து கிழே விழுந்துள்ளார்.

சம்பவ இடத்திலேயே குமார் உயிரிழந்ததாகவும், அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக காந்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தின் சிசிடிவி வீடியோ இப்போது வெளியாகி அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. இது குறித்து சாந்தாநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE