திருப்பூரில் மனைவி குறித்து அவதூறு: போதையில் கறிக்கடைக்காரரை கத்தியால் குத்திக் கொன்ற நண்பர் 

By இரா.கார்த்திகேயன்

திருப்பூர்: மனைவி குறித்து அவதூறாகப் பேசிய கறிக்கடைக்காரரை வெட்டி கொலை செய்த நண்பரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருப்பூர் காசிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி (40). இவர் அதே பகுதியில் இறைச்சிக் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு தனது நண்பர் முத்துராஜா (39) என்பவருடன் மது அருந்த நல்லூர், எம்ஜிஆர் நகர் பகுதியில் உள்ள வடிவேல் என்பவர் வீட்டிற்குச் சென்றுள்ளனர். அங்கு 3 பேரும் மது அருந்திக் கொண்டிருந்த போது முத்துராஜாவின் மனைவி குறித்து கார்த்தி தவறாக பேசியதாக கூறப்படுகிறது.

மது போதையில் இருந்த இருவருக்கும் இது தொடர்பாக வாய் தகராறு முற்றிய நிலையில் கார்த்திக் கொண்டு வந்திருந்த கறி வெட்டும் கத்தியை எடுத்து, கார்த்தியை முத்துராஜா சரமாரியாக வெட்டியும் குத்தியும் உள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்துள்ளார் கார்த்திகேயன். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து வந்து முத்துராஜாவை பிடித்தனர்.

மேலும், கார்த்திக்கை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திக் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த நல்லூர் போலீஸார், முத்துராஜாவை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE