காதல் விவகாரம்: வண்டலூரில் பள்ளி மாணவரை கத்தியால் குத்திய 6 பேர் கைது

By KU BUREAU

வண்டலூர்: வண்டலூரில் தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர் ஒருவர், சக மாணவியை காதலித்துள்ளார். ஆனால், அந்த மாணவியை ஏற்கெனவே அப்பள்ளியில் படித்த, முன்னாள் மாணவர் காதலித்துள்ளார். அவர் தற்போது கேளம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார்.

இது தொடர்பாக அவர்களிடையே தகராறு இருந்துள்ளது. இந்நிலையில், பாலிடெக்னிக் மாணவர், தனது நண்பர்கள் கிரிதரன் (18), திவாகர் (18), சஞ்சய், (18) உள்ளிட்டோருடன் நேற்று முன்தினம் மாலை பள்ளி மாணவரை வழிமறித்து, பிரச்சினையில் ஈடுபட்டுள்ளனர்.

திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பள்ளி மாணவரை குத்தினார். பின்னர் அவர்கள் அனைவரும் தப்பியோடிவிட்டனர். தகவலறிந்து வந்த கிளாம்பாக்கம் போலீஸார், பள்ளி மாணவரை மீட்டு, தாம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, பாலிடெக்னிக் மாணவர் மற்றும் அவரது நண்பர்கள் உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE