5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மூன்று சிறுவர்கள் கைது: உ.பியில் அதிர்ச்சி

By KU BUREAU

உத்தரப் பிரதேசம்: பல்லியா மாவட்டத்தில் ஐந்து வயது சிறுமி, மூன்று சிறுவர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

கோட்வாலி காவல் நிலையப் பகுதியில் அக்டோபர் 16ஆம் தேதி மாலையில் ஐந்து வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். சிறுமியின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்த 3 சிறுவர்கள் இந்த கொடூரச் செயலை செய்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், காவல்துறை கண்காணிப்பாளர் விக்ராந்த் வீர் குற்றம் நடந்த இடத்தை பார்வையிட்டு தடயவியல் குழுவுடன் ஆய்வு செய்தார். சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், பிஎன்எஸ் மற்றும் போக்சோ சட்டத்தின் தொடர்புடைய விதிகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நேற்று இரவு 6, 13 மற்றும் 16 வயதுடைய குற்றவாளிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரும் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE