கச்சத்தீவில் கரை ஒதுங்கிய 25 கிலோ கஞ்சா மூட்டை: கைப்பற்றியது இலங்கைக் கடற்படை

By எஸ்.முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: கச்சத்தீவில் கரை ஒதுங்கிய 25 கிலோ கஞ்சா மூட்டையை இலங்கை கடற்படையினர் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

கச்சத்தீவு கடற்கரையில் சந்தேகப்படும் நிலையில் கரை ஒதுங்கியிருந்த ஒரு மூட்டையை இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர் செய்தனர். அந்த மூட்டையை சோதனையிட்ட போது அதனுள், 8 பொட்டலங்கள் கொண்ட 25 கிலோ எடை கொண்ட கஞ்சா இருந்துள்ளது.

முதற்கட்ட விசாரணையில், இந்த கஞ்சா அடங்கிய மூட்டையை இலங்கைக்கு படகில் கடத்திச் செல்லப்பட்டபோது கடலில் தவறி விழுந்து மிதந்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. மேலும், இதனை கடத்தியவர்கள் யார் என்பது குறித்து இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE