செஞ்சி அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை: அரசு பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது

By எஸ்.நீலவண்ணன்

செஞ்சி: மாணவியை பாலியல் தொந்தரவு செய்ததாக மேல்மலையனூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியரை போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

செஞ்சி அருகே பொன்பத்தி கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (59). இவர் மேல்மலையனூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் மேல்மலையனூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் அதே பள்ளியில் படித்து வருகிறார். அவரிடம் ஆசிரியர் சேகர் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து பள்ளி மாணவி அவரது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து மாணவியின் பெற்றோர் செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் செஞ்சி மகளிர் காவல் ஆய்வாளர் விஜி தலைமையிலான போலீஸார் விசாரணை மேற்கொண்டு ஆசிரியர் சேகரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE