துர்கா பூஜைக்கு சென்ற 2 சிறுமிகள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: கிராமத் தலைவரின் மகன் கைது!

By KU BUREAU

ஜார்க்கண்ட்: பலாமு மாவட்டத்தில் துர்கா பூஜைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய இரண்டு சிறுமிகள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

கடந்த அக்டோபர் 11 ஆம் தேதி 2 சிறுமிகள் சரய்தியில் நடந்த துர்கா பூஜை கண்காட்சியில் கலந்துகொண்ட பின்னர் வீடு திரும்பியபோது, 6 பேர் கொண்ட கும்பல் அவர்களை நடுவழியில் மறித்து கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

அந்த சிறுமிகள் எப்படியோ அவர்களிடம் இருந்து தப்பித்து வீட்டை அடைந்து குடும்பத்தினரிடம் தங்களுக்கு நடந்த கொடுமையை கூறினர். ஆரம்பத்தில், பஞ்சாயத்து அளவில் இப்பிரச்சினையை தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் ஞாயிற்றுக்கிழமை மாலை சிறுமிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் நேற்று காவல்துறையில் புகார் அளித்தனர்.

இதுகுறித்து பேசிய சதர்பூர் துணைப் பிரிவு காவல்துறை அதிகாரி அவத் யாதவ், “புகாரைப் பெற்ற பிறகு விசாரணை தொடங்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேரில், கிராமத் தலைவரின் மகன் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் இருவர் இன்னும் தலைமறைவாக உள்ளனர்” என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE