கடலூர் - குள்ளஞ்சாவடி அருகே தனியார் சொகுசு பேருந்து சாலையின் சென்டர் மீடியனின் மோதி விபத்து

By க. ரமேஷ்

கடலூர்: கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே சாலையின் நடுவே உள்ள சென்டர் மீடியனில் தனியார் சொகுசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இது குறித்து குள்ளஞ்சாவடி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரியில் இருந்து நேற்று இரவு (அக்.12) இரவு தனியார் சொகுசு பேருந்து ஒன்று கோயம்புத்தூர் நோக்கி புறப்பட்டு சென்றது. அப்பேருந்தை கோயம்புத்தூர் அருகே பாப்பம்பட்டி பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (44)என்பவர் ஓட்டி சென்றார். பேருந்து நள்ளிரவு நேரத்தில் குள்ளஞ்சாவடி அருகே சுப்பிரமணியபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள சென்டர் மீடியனில் பலமாக மோதி விபத்துகுள்ளாகி நின்றது.

இந்த நிலையில் கடலூரில் இருந்து குள்ளஞ்சாவடி நோக்கி வந்து கொண்டிருந்த கார், பேருந்தின் பின்னால் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணம் செய்த ஐந்து பயணிகள் மற்றும் காரில் வந்த நான்கு நபர்கள் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது குறித்து குள்ளஞ்சாவடி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE