மதுரையில் பரபரப்பு: குடும்பத்தகராறில் தம்பியைக் கத்தியால் குத்திக் கொன்ற அண்ணன் கைது

By என்.சன்னாசி

மதுரை: மதுரை அருகே குடும்பப் பிரச்சனை காரணமாக தனியார் பள்ளி ஆசிரியரை கொலை செய்த அண்ணணை போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாநகர் காமராஜர்புரம் பகுதியை சேர்ந்த கர்ணாமணி (38). இவர் டீக்கடையில் வேலை செய்கிறார். இவரது தம்பி நினைவரசன் (35). இவர் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், குடும்ப பிரச்சனை தொடர்பாக நேற்று இரவு இருவரும் பேசிக் கொண்டிருந்த போது, ஏற்பட்ட வாக்குவாதத்தில் தம்பி நினைவரசனை, கர்ணாமணி கத்தியால் குத்தியதில் காயமடைந்தார்.

உடனடியாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட, நினைவரசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மதுரை தெப்பகுளம் காவல் துறையினர் வழக்குப் பதிந்து கர்ணாமணியை தைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE