ராமேசுவரத்தில் மனைவியை கொலை செய்து வீட்டுக்கு வெளியில் புதைத்த கணவன் கைது

By எஸ்.முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: ராமேசுவரத்தில் குடும்ப தகராறில் மனைவியை கொலை செய்து வீட்டுக்கு அருகிலேயே புதைத்த கணவரை போலீஸார் கைது செய்தனர்.

ராமேசுவரத்தில் உள்ள ஏரகாடு கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் தர்மராஜ் (40) இவரின் மனைவி தனலெட்சுமி (36). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். தர்மராஜ் அவரது மனைவி தனலட்சுமி இடையே சண்டை ஏற்பட்டு சில மாதங்களாக பிரிந்து இருந்துள்ளனர். மேலும், தனலட்சுமி கணவரிடமிருந்து விவாகரத்து கோரியதாகவும் தெரிகிறது.

இந்நிலையில், திங்கட்கிழமை மதியம் தர்மராஜ்க்கும், தனலெட்சுமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையாக மாறியுள்ளது. சண்டையின் போது வீட்டில் கிடந்த சுத்தியலை எடுத்து தனலெட்சுமியை தர்மராஜ் தாக்கியுள்ளார். இதனால் ரத்த காயம் ஏற்பட்டு தனலெட்சுமி மயங்கி சரிந்துள்ளார். பின்னர், வீட்டுக்கு வெளியில் கிடந்த வேலி கல்லால் தனலெட்சுமியை அடித்து கொன்று வீட்டிற்கு வெளியில் இருந்த மணல் பகுதியில் பள்ளம் தோண்டி உடலை தர்மராஜ் புதைத்துள்ளார்.

தர்மராஜ்ககும், தனலெட்சுமிக்கு சண்டை ஏற்பட்டதை அறிந்த தனலெட்சுமியின் அண்ணன் முனியாண்டி, ராமேசுவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தொடர்ந்து டிஎஸ்பி உமாதேவி தலைமையிலான போலீஸார் தர்மராஜை கைது செய்து விசாரித்தனர்.

விசாரணையில் தர்மராஜ் அளித்த தகவலின் அடிப்படையில், வீட்டுக்கு அருகிலேயே புதைக்கப்பட்ட தனலெட்சுமியின் உடலை வட்டாச்சியார் செல்லப்பா, கிராம அலுவலர் ரோட்ரிகோ முன்னிலையில் போலீஸார் தோண்டி எடுத்து பிரேத்து பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE