காரைக்காலில் பள்ளி வேன் மோதி தந்தை உயிரிழப்பு; மகள் படுகாயம்

By KU BUREAU

காரைக்கால்: காரைக்கால் அருள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்த ராஜன் (52). காரைக்காலில் தனியார் வங்கியில் காசாளராக பணியாற்றி வந்தார். இவர், நாகையில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு பொறியியல் படித்து வரும் தனது மகள் லக் ஷிதாவை நேற்று காலை வீட்டில் இருந்து கல்லூரிக்கு இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றார்.

திருப்பட்டினம் பகுதி திருமலைராஜன் ஆற்றுப் பாலத்தில் சென்றபோது, எதிரே தனியார் பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு வந்த வேன் இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில், கோவிந்தராஜன் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த லக் ஷிதா காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இது குறித்து, திருப்பட்டினம் போக்குவரத்து காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து, பள்ளி வேன் ஓட்டுநர் மாதவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE