கவரப்பேட்டை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 2 மாணவர்கள் உயிரிழப்பு

By ப.முரளிதரன்

சென்னை: கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் நிகழ்ந்த சாலை விபத்தில் 2 மாணவர்கள் உயிரிழந்தனர்.

சென்னை, ராயப்பேட்டையில் தங்கியிருந்து சி.ஏ.படித்து வந்தவர்கள் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் (20), கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆனிமோள் (22). இவர்கள் இருவரும் தங்களது நண்பர்களுடன் இன்று ஆந்திராவில் உள்ள தடா நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா சென்றனர். அனைவரும் பைக்கில் சென்றனர். அப்போது, வழியில் திருவள்ளூர் மாவட்டம், கவரப்பேட்டையை அடுத்த பெருவாயல் அருகே சென்ற போது சந்தோஷ் சென்ற பைக் மீது பின்னால் வந்த லாரி மோதியது.

இதில், சந்தோஷ் மற்றும் உடன் பைக்கில் சென்ற ஆனிமோள் இருவரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், இருவரும் வழியிலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து, கவரப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE