சிறுமியை திருமணம் செய்த இளைஞர் மீது வழக்கு: கிருஷ்ணகிரி ஊத்தங்கரை அருகே பரபரப்பு

By KU BUREAU

கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அருகே சிறுமியை திருமணம் செய்த இளைஞர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசராணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், திருப்பத்தூர் மாவட்டம் தெலுங்கு மாட்ரபள்ளி கிராமத்தைச் சேர்ந்த இளவரசன் (21) என்பவருக்கும் கடந்த ஜூன் மாதம் 17-ம் தேதி, ஊத்தங்கரை அருகே உள்ள வேலாவள்ளி கிராமத்தில் திருமணம் நடந்தது. இதற்கு இளவரசன் மற்றும் பெண்ணின் பெற்றோர் உடந்தையாக இருந்தனர்.

இதுதொடர்பாக மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலக சமூக நலத்துறையின் விரிவாக்க அலுவலர் அலமேலு ஊத்தங்கரை அனைத்து மகளிர் போலீஸில் புகார் செய்தார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE