திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளைஞர் சாலை விபத்தில் உயிரிழப்பு: உடுமலையில் சோகம்

By KU BUREAU

உடுமலை: திருப்பூர் மாவட்டம் உடுமலை அண்ணா குடியிருப்பை சேர்ந்த சிவராஜ் என்பவரின் மகன் கோகுல்நாத் (30). இவருக்கு, அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்தது. இதற்காக திருமண அழைப்பிதழை வழங்குவதற்காக, உடுமலையில் இருந்து அந்தியூர் நோக்கி நேற்று காலை காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, பூலாங்கிணறு என்ற இடத்தின் அருகே கட்டுப்பாட்டை இழந்து கார் தாறுமாறாக ஓடி, அருகில் இருந்த கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

அடுத்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளைஞர், சாலை விபத்தில் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE