சோழவந்தான் அருகே காதல் விவகாரம் - 6 வயது சிறுவன் வெட்டிக் கொலை

By என்.சன்னாசி

மதுரை: சோழவந்தான் அருகே காதல் விவகாரத்தில் 6 வயது சிறுவன் வெட்டிக் கொல்லப்பட்டார்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகிலுள்ள திருவேடகம் காலனியைச் சேர்ந்தவர் அய்யனார் (45). இவருக்கு உமா என்ற மனைவி, இரு குழந்தைகள் உள்ளனர். அப்பகுதியைச் சேர்ந்த விவேக் என்பவருக்கும், உமாவிற்கும் பழக்கம் ஏற்பட்ட நிலையில், இருவரும் ஊரைவிட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆத்திரமடைந்த அய்யனார் நேற்று முன்தினம் இரவு திடீரென விவேக் வீட்டுக்கு சென்றுள்ளார்.

தூங்கிக் கொண்டிருந்த விவேக்கின் தந்தை முத்துச்சாமி (50), அவரது மனைவி பொன்மணி (42), பேரன் மாதேஷ் பாண்டியன் (6) ஆகியோர் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினார். இது குறித்து தகவலறிந்த சோழவந்தான் போலீஸார் மூவரையும் மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி சிறுவன் மாதேஷ் பாண்டியன் பரிதாபமாக உயிரிழந்தான். இது குறித்து அய்யனார் உட்பட 4 பேர் மீது சோழவந்தான் போலீஸார் வழக்குப் பதிவு தேடுகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE