குழந்தையை கொன்றுவிடுவதாக மிரட்டி தாய் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: திருடர்கள் வெறிச்செயல்

By KU BUREAU

ஒடிசா: புவனேஸ்வர் அடுக்குமாடி குடியிருப்பில், பெண்ணிடம் இருந்த நகைகளை கொள்ளையடித்த கொள்ளையர்கள், அந்த பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

ஒடிசாவின் புவனேஸ்வரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டு திருடர்கள், திங்கள்கிழமை இரவு கத்தி முனையில் 27 வயது பெண்ணின் நகைகளை கொள்ளையடித்ததுடன், அப்பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமையும் செய்தனர்.

புவனேஸ்வரில் உள்ள மைத்ரி விஹாரில் செப்டம்பர் 30ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. முதலில் கத்தி முனையில் பெண்ணின் நகைகள் மற்றும் மொபைல் ஃபோனை கொள்ளையடித்த கொள்ளையர்கள், பின்னர் 2 வயது மகளை கொலை செய்து விடுவதாக மிரட்டி அப்பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

புவனேஸ்வரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் அந்த பெண், கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் அந்த குடியிருப்பில் குடியேறியதாக போலீஸார் தெரிவித்தனர். மேலும், மூங்கில் கம்புகளை பயன்படுத்தி திருடர்கள் கட்டிடத்திற்குள் நுழைந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கட்டிடத்தில் சிசிடிவி கேமராக்கள் இல்லாததால் விசாரணை கடினமாக உள்ளது என போலீஸார் தெரிவித்தனர். இதனால் அருகிலுள்ள பகுதிகளில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE