புனேவில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழப்பு!

By KU BUREAU

இன்று அக்டோபர் 2ம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இருந்து கிளம்பிய ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 3 பேரும் உயிரிழந்தனர்.

புனேவில் ஆக்ஸ்போர்டு கோல்ஃப் மைதானத்தின் ஹெலிபேடில் இருந்து மும்பை ஜூஹூவுக்கு ஹெலிகாப்டர் புறப்பட்ட நிலையில், ​​நகரின் குடியிருப்பு புறநகர்ப் பகுதியான பவ்தானில் உள்ள மலைப்பாங்கான நிலப்பரப்புக்கு அருகில் மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.

இந்த விபத்து குறித்து பிம்ப்ரி சின்ச்வாட் காவல்துறை இணை ஆணையர் ஷஷிகாந்த் மஹாவர்கர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “டெல்லியை சேர்ந்த தனியார் விமான நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளாகி இருக்கிறது. உயிரிழந்தவர்களில் இரண்டு விமானிகள் மற்றும் ஒரு பயணி இருந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

தீயணைப்பு துறை வாகனங்களுடன் எங்கள் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். விபத்து நேரிட்ட பிறகு ஹெலிகாப்டர் தீப்பிடித்து எரிந்துள்ளது. விபத்துக்கான காரணம் என்ன என்று இதுவரை தெரியவில்லை. இது குறித்து மேலும் விசாரணைகள் நடைபெற்று வருகிறது” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE