பட்டாலியன் பெண் அலுவலர் வீட்டை உடைத்து 40 பவுன் நகை, ரூ.1 லட்சம் பணம் கொள்ளை

By KU BUREAU

விழுப்புரம்: விழுப்புரம் அருகே சாலாமேடு பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். இவர் காரைக்கால் பகுதியில் உள்ள அரசு அலுவலகத்தில் உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறார்.

இவரது மனைவி சாந்தி உளுந்தூர்பேட்டை போலீஸ் பட்டாலியன் பிரிவில் அமைச்சுப் பணியில் நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இருவரும் வாரந்தோறும் திங்கட்கிழமை பணிக்குச் சென்று வெள்ளிக்கிழமை இரவு வீட்டிற்கு வருவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் இரவு இருவரும் வீட்டிற்கு வந்தனர்.

அப்போது முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த இருவரும் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்து 40 பவுன் நகை, ரூ.1 லட்சம் பணம் திருடு போயிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீஸார் விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE