சென்னை சென்ட்ரல் அருகே பூசணிக்காய் வியாபாரியிடம் ரூ.8 லட்சம் வழிப்பறி

By KU BUREAU

சென்னை: சென்னை சென்ட்ரல் அருகே பூசணிக்காய் வியாபாரியிடம் ரூ.8 லட்சம் வழிப்பறி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த பூசணிக்காய் வியாபாரி வெங்கட ரெட்டி. இவர் நேற்று முன்தினம் ரயில் மூலம் சென்னை வந்துள்ளார். பின்னர், கோயம்பேடு சென்று பணம் பெற்றுள்ளார்.

தொடர்ந்து அவர் அங்கிருந்து சென்ட்ரல் வந்துள்ளார். பின்னர், அவர் நண்பர் ஒருவரைப் பார்க்க வால்டாக்ஸ் சாலை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 3 பேர் கும்பல் கத்திமுனையில் மிரட்டி வெங்கட ரெட்டியிடமிருந்து ரூ.8 லட்சத்தை பறித்து சென்றுள்ளது.

அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து பூக்கடை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். அதன்படி, போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். முதல் கட்டமாக சம்பவ இடம் மற்றும் அதைச் சுற்றி பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றி துப்புத் துலக்கி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE