ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை: புதுக்கோட்டை அருகே காருக்குள் கிடந்த உடல்கள்

By KU BUREAU

புதுக்கோட்டை/பெரம்பலூர்: திருமயம் அருகேயுள்ள இளங்குடிப்பட்டியில் நேற்று ஒரு கார்நீண்டநேரமாக நின்று கொண்டிருந்தது. இதுகுறித்து தகவலறிந்த நமணசமுத்திரம் போலீஸார் அங்குசென்று, காரின் கதவை உடைத்துதிறந்துபார்த்தனர்.

அப்போது, காருக்குள் 5 பேர் உயிரிழந்த நிலையில் கிடந்ததுதெரியவந்தது. இதையடுத்து, 5 பேரின் உடல்களையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விசாரணையில், அவர்கள் சேலம் ஸ்டேட் பாங்க் காலனியைச் சேர்ந்த மணிகண்டன்(50), அவரது மனைவி நித்யா(48), மகள் நிகரிகா(22), மகன் தீரன்(20), மணிகண்டனின் தாய் சரோஜா(70) என்பதும், சேலம், கிருஷ்ணகிரியில் மணிகண்டன் மெட்டல் தொழில் செய்து வந்ததும் தெரியவந்தது. காருக்குள் பூச்சிக்கொல்லி மருந்து பாட்டில் கிடந்தது. இதனால், அவர்கள் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீஸார் தெரிவித்தனர்.

கடன் தொல்லையால்... மேலும், காரில் இருந்த ஒருகடிதத்தையும் போலீஸார் கைப்பற்றினர். அதில், ‘‘நாங்கள் கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டோம். எங்கள் இறப்புக்கு யாரும் காரணம் இல்லை. எங்கள் உடல்களை ஊருக்கு அனுப்பாமல், இங்கேயே அடக்கம்செய்ய வேண்டும்’’ என்று எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து, மணிகண்டன் யார் யாரிடம் கடன் வாங்கியிருந்தார், அவருக்கு நெருக்கடி கொடுத்து தற்கொலைக்கு தூண்டியது யார் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

பெற்றோருடன் மகன் தற்கொலை: பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் அருகேயுள்ள என்.புதூர் மேலத் தெருவைச் சேர்ந்தவர் சின்னதுரை(58). இவரது மனைவி கலா(50), மகன் சிவா(30). இவர்கள் அப்பகுதியில் தீபாவளிச் சீட்டு நடத்தியுள்ளனர். வசூலித்த பணத்தை செலவு செய்ததால் ரூ.10 லட்சம் கடன் ஏற்பட்டது. பணத்தை கொடுத்தவர்கள் திருப்பிக் கேட்டு நெருக்கடி கொடுத்ததால், மனமுடைந்துள்ளனர். இந்நிலையில், சின்னதுரை, கலா, சிவா ஆகியோர் நேற்று பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டு, அப்பகுதியில் உள்ள உள்ள ஓடையில் இறந்துகிடந்தனர். இதுகுறித்து வி.களத்தூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE