ராமேசுவரத்தில் கைதி தப்பி ஓட்டம் - 2 போலீஸார் சஸ்பெண்ட்

By எஸ்.முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: ராமேசுவரத்தில் கைதியை தப்ப விட்ட இரண்டு போலீஸாரை எஸ்.பி.சந்தீஷ் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

ராமேசுவரம் துறைமுக காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு ஒன்றில் எம்ஆர்டி நகரை சேர்ந்த சந்துரு (24) என்பவரை கடந்த 7 மாதங்களாக போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த வாரம் சந்துருவை கைது செய்து மேல் நடவடிக்கைகளுக்காக சந்துருவை துறைமுக காவல் நிலையத்திலிருந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் ரவி, நாராயணன் ஆகிய இருவரும் தங்களின் பைக்குகளில் அழைத்துச் சென்றுள்ளனர்.

கைது செய்யப்பட்ட ரவி ஒரு பைக்கை ஓட்ட, பின்புறம் சிறப்பு சார்பு ஆய்வாளர் அமர்ந்து சென்றுள்ளார். இவர்களை மற்றொரு சார்பு ஆய்வாளரான நாராயணன் பின் தொடர்ந்து சென்றுள்ளார். நீதிமன்றம் அருகில் வரும்போது சந்துரு பைக்குடன் இரண்டு சார்பு ஆய்வாளர்களையும் விட்டு விட்டு தப்பி சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து வந்த மாவட்ட எஸ்.பி சந்தீஷ் சிறப்பு சார்பு ஆய்வாளர்களான ரவி, நாராயணன் ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE