திண்டுக்கல் அருகே முன்விரோதம் காரணமாக ஒருவர் கொலை

By KU BUREAU

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே காப்பிளியபட்டியை சேர்ந்தவர் தீனதயாளவர்மன்(32). நிதிநிறுவனம் ஒன்றில் வேலைபார்த்து வந்தவர் கடந்த சில தினங்களாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார்.

தனது குழந்தைகளை இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்று பள்ளியில் விட்டுவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் காப்பிளியபட்டி மதுக்கடை அருகேயுள்ள குளக்கரையில் தலை உடலில் வெட்டுக் காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவலறிந்த வடமதுரை போலீஸார் நிகழ்விடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இறந்த தீனதயாளவர்மன் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளன.

முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. வடமதுரை போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE