தபால் அலுவலக கழிவறையில் பெண் ஊழியரை வீடியோ எடுக்க முயற்சி: சக ஊழியர் கைது

By KU BUREAU

மேற்கு வங்கம்: கொல்கத்தாவில் உள்ள தபால் நிலையத்தில் பெண் ஊழியர் ஒருவர் கழிவறையில் இருந்தபோது வீடியோ எடுக்க முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொல்கத்தாவில் உள்ள பொது தபால் நிலையத்தில் பணியாற்றும் பெண் ஊழியர் நேற்று காலை 11.50 மணியளவில், தனது அலுவலகத்தின் உள்ள பெண்கள் கழிப்பறையைப் பயன்படுத்தியுள்ளார். அப்போது அங்கே பணியாற்றும் ஆண் ஊழியர் ஒருவர் கதவு இடுக்கு வழியாக இதனை தனது மொபைல் போனில் வீடியோ எடுக்க முயன்றார். அவரை மற்ற ஊழியர்கள் கையும் களவுமாகப் பிடித்தனர்.

குற்றவாளியான அந்த நபர் தபால் நிலையத்தின் சாதாரண ஊழியர் என்றும், உல்டடங்காவில் வசிப்பவர் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து இது தொடர்பாக ஹேரே ஸ்ட்ரீட் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார். மேலும், இதுகுறித்து விசாரணை தொடங்கியுள்ளதாகவும், கைதான நபரின் செல்போன் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE