நெல்லை அருகே கொதிக்கும் எண்ணெயை தலையில் ஊற்றியதால் தொழிலாளி உயிரிழப்பு - மனைவி மீது தாயார் போலீஸில் புகார்

By KU BUREAU

திருநெல்வேலி: குடும்ப தகராறில் கொதிக்கும் எண்ணெயை தலையில் ஊற்றிய தால் தொழிலாளி உயிரிழந்தார். அவரது மனைவி மீது, தாயார் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

திருநெல்வேலி அருகே பர்கிட்மா நகரைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சிவன் பெருமாள் (40). இவரது மனைவி செல்வி (34). இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது.

கடந்த 2 நாட்களுக்கு முன் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது, குடிபோதையில் இருந்த சிவன்பெருமாள், கொதிக்கும் எண்ணெய் தலையில் கொட்டிய தால் ஏற்பட்ட படுகாயத்துடன், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி சிவன்பெருமாள் உயிரிழந்தார்.

தனது மகன் உயிரிழப்பில் மர்மம் இருப்பதாகவும், கொதிக்கும் எண்ணெயை செல்வி ஊற்றியதாலேயே சிவன் பெருமாள் உயிரிழந்ததாகவும் கூறி, அவரது தாயார் பேச்சியம்மாள் போலீஸில் புகார் தெரிவித்துள்ளார். பாளையங்கோட்டை தாலுகா போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE