செங்கல்பட்டில் நடைப்பயிற்சி சென்ற நபர் வெட்டிக் கொலை

By பெ.ஜேம்ஸ் குமார்

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் நடைப்பயிற்சி சென்ற நபர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் புலிப்பாக்கம் மதுரைவீரன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் நாகூரான். இவரது மகன் சரவணன்( 39) இவருக்கு கடந்த 2009ஆம் ஆண்டு நடந்த சாலை விபத்து நடந்துள்ளது. அந்த விபத்தில் சரவணனுக்கு கால்களில் பலத்த அடிப்பட்டு நடக்க முடியாமல் இருந்துள்ளார்.

சிகிச்சைக்கு பிறகு கடந்த 10 ஆண்டுளாக புலிப்பாக்கத்தில் இருந்து மகாலட்சுமி நகர் வரை தினமும் நடைப்பயிற்சி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் இன்று எப்போதும் போல சரவணன் நடைபயிற்சி மேற்கொண்டார். இந்நிலையில். சரவணன் மகாலட்சுமி நகரில் தலையில் வெட்டுக் காயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தாலுகா போலீஸார் சரவணனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை குறித்து நடத்திய விசாரணையில் சரவணனை தலையில் பலமாக அரிவாளால் வெட்டி மர்மநபர்கள் கொலை செய்தது தெரியவந்துள்ளது.

சரவணனை கொலை செய்வதற்கான காரணம் என்ன? அவருக்கு யாரிடமாவது முன்விரோதம் இருந்ததா என போலீஸார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு கொலை செய்த மர்மநபர்களை தேடி வருகின்றனர். அதிகாலை நடந்த இந்த கொலையால் மகாலட்சுமி நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE