பகீர்... குப்பைத் தொட்டிக்குள் மனித எலும்புக்கூடுகள்: கோவை மக்கள் அதிர்ச்சி!

By காமதேனு

கோவையில் குப்பைத்தொட்டியில் மனித எலும்புக்கூடுகள் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவை மாந்திரீகத்திற்கு பயன்படுத்தப்பட்ட எலும்புக்கூடுகளா என போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட சுங்கம் பகுதியில் இன்று காலை தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். காமாட்சி அம்மன் கோயில் அருகில் உள்ள குப்பைத்தொட்டியில் குப்பைகளை சேகரித்த போது, அதிலிருந்த பிளாஸ்டிக் பை ஒன்று வித்தியாசமாக இருந்ததால், பணியாளர்கள் சந்தேகமடைந்தனர்.

இதையடுத்து, அதனை திறந்து பார்த்த போது, உள்ளே 2 மனித மண்டை ஓடுகள் உட்பட எலும்புத்துண்டுகள் இருப்பது தெரியவந்தால் அதிர்ச்சி அடைந்தனர்.

எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட இடம்

இது குறித்து அவர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சிங்காநல்லூர் போலீஸார், மண்டை ஓடுகளை மீட்டு விசாரணைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இந்த மண்டை ஓடுகள் மருத்துவமனையிலிருந்து வீசப்பட்டனவா அல்லது மயானத்தில் இருந்து திருடப்பட்டனவா அல்லது மாந்திரீகம் செய்ய பயன்படுத்தப்பட்டனவா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எலும்புக்கூடுகள் கிடந்த பகுதியில் போலீஸார்.

மண்டை ஓடுகள் பிளாஸ்டிக் கவரில் வைத்து குப்பைத் தொட்டியில் வீசப்பட்டதாக பரவிய தகவலை அடுத்து, அப்பகுதியில் ஏராளமானோர் குவிந்தனர். மேலும் வாகன ஓட்டிகளும் அங்கு நின்று வேடிக்கை பார்க்க துவங்கியதால், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதையடுத்து போலீஸார் வாகன நெரிசலை சீர்படுத்தியதோடு, வேடிக்கைப் பார்க்க வந்தவர்களை அங்கிருந்து கலைந்து போக செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

எலும்புக்கூடு கிடந்த பகுதி

இதையும் வாசிக்கலாமே...


மிக்ஜாம் புயல்... நடிகர்கள் சூர்யா, கார்த்தி ரூ.10 லட்சம் நிதி உதவி!

சென்னையில் முடங்கும் போக்குவரத்து...புறநகர் ரயில்கள் முற்றிலும் ரத்து!

புரட்டிப் போட்ட மிக்ஜாம் புயல்.. 7 போ் உயிரிழப்பு: வெள்ளத்தில் இருந்து 10 ஆயிரம் போ் மீட்பு!

நிரம்பி வழியும் ஏரிகள்... கொசஸ்தலை, அடையாறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு!

மிக்ஜாம் புயல்... ஆந்திராவில் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE