தேவகோட்டை அருகே திருமணமான 12 நாட்களில் விபத்தில் காயமடைந்த பெண் உயிரிழப்பு

By KU BUREAU

தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே பரியன்வயலைச் சேர்ந்தவர் செல்வராஜ்-மாலதி தம்பதி. இவர்களது ஒரே மகள் முத்துமணி (27). கோவையில் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

வளங்காவயலைச் சேர்ந்த சந்திரனின் ஒரே மகன் ராமையா (30). வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். செப்.8-ம் தேதி ராமையா, முத்துமணிக்கு இடையே திருமணம் நடைபெற்றது. செப்.18-ம் தேதி இருவரும் வளங்காவயலில் இருந்து பரியன்வயலுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றனர்.

ஆறாவயல் பஞ்சாலை அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக இருவரும் சாலையோர பள்ளத்தில் விழுந்தனர். பலத்த காயமடைந்த முத்துமணியை காரைக்குடி தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ராமையாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

நேற்றுமுன்தினம் சிகிச்சை பலனின்றி முத்துமணி உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தேவகோட்டை அரசு மருத்து வமனைக்கு கொண்டு வரப்பட்டது. இதையறிந்த ராமையாவும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தேவகோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைத்தனர். ஆறாவயல் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE