பூனை பிடித்து வந்த பாம்பு கடித்து பெண் உயிரிழப்பு @ பொள்ளாச்சி

By KU BUREAU

பொள்ளாச்சி: பொள்ளாச்சி கோட்டூர் சாலை நேரு நகரை சேர்ந்த ரவி என்பவரது மனைவி சாந்தி (58). இவர்கள், வீட்டில் ஒரு பூனையை செல்லப் பிராணியாக வளர்த்து வருகின்றனர். கடந்த 18-ம் தேதி இரவு வீட்டுக்கு வெளியே பூனை சுற்றித் திரிந்தது. அங்கு ஊர்ந்து வந்த கட்டுவிரியன் பாம்பை துரத்திக் கடித்து விளையாடியது.

பின்னர் அந்த பாம்பை, வாயில் கவ்விக்கொண்டு வீட்டில்உள்ள ஓர் அறையில் போட்டுவிட்டுச் சென்றது.

அந்த அறையில் சாந்தி அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்தார். பூனை கடித்ததில் ஆக்ரோஷமாக இருந்த பாம்பு,சாந்தியை கடித்தது. அவரது அலறல் சத்தம் கேட்டு, மகன் சந்தோஷ் விரைந்து வந்தார்.

சாந்தியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். சிகிச்சை பலனின்றி கடந்த 19-ம் தேதி உயிரிழந்தார். இதுகுறித்து பொள்ளாச்சி நகரகிழக்கு காவல்நிலைய போலீஸார் விசாரிக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE