மானாமதுரை அருகே பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 5 பேர் கைது

By KU BUREAU

மானாமதுரை: மானாமதுரை அருகே பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 5 பேரை போலீஸார் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே தாயமங்கலம் காலனியை சேர்ந்தவர் அரவிந்த். இவருக்கு மானாமதுரை பகு தியைச் சேர்ந்த 38 வயது பெண்ணுடன் பழக்கம் இருந்தது. இந்நிலையில், செப்.17-ம் தேதி அந்த பெண்ணுடன் தாயமங்கலம் சாலையில் உள்ள முந்திரிக் காட்டுக்குள் சென்றுள்ளார்.

அப்போது, அங்கு வந்த விளாக்குளத்தைச் சேர்ந்த வில்வக்குமார் (25), தவமுனியசாமி (26), பீக்குளத்தைச் சேர்ந்த ராமசாமி (24), முத்துராமலிங்கபுரத்தைச் சேர்ந்த அஜய் குமார் (19), ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் (22) ஆகிய 5 பேர் அரவிந்தை தாக்கினர். பின்னர், அவருடன் வந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.

காயமடைந்த அரவிந்த் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மானாமதுரை அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிந்து, பலாத்காரம் செய்த 5 பேரையும் கைது செய்தனர். தப்பியோட முயன்ற வில்வக்குமார், முத்துக்குமார் ஆகியோருக்கு கால் முறிந்தது. அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE