கூடுவாஞ்சேரி அருகே வீட்டில் பெண் மர்ம மரணம்: கணவர் மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதி

By பெ.ஜேம்ஸ் குமார்

கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அடுத்த தைலாவரம் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் சந்தான குமார் (46), மாடம்பாக்கத்தில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பரமேஸ்வரி (40), இருவர்களுக்கும் திருமணம் ஆகி 25 ஆண்டுகள் ஆகிறது இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் இன்று (செப்.19) வீட்டில் இருந்துள்ளனர். இந்நிலையில் இவர்களது மகள் கல்லூரிக்கு சென்றுவிட்டு மாலை வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது வீட்டில் அவரது அம்மா பரமேஸ்வரி ரத்த காயங்களுடன் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதே போல அவரது தந்தை சந்தான குமார் மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே நந்தினி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் இருவரையும் மீட்டு பொத்தேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார்.

அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்துவிட்டு பரமேஸ்வரி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சந்தான குமார் மட்டும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கூடுவாஞ்சேரி போலீஸார் வழக்குப்பதிவு கணவன், மனைவி இருவரும் வீட்டில் இருக்கும்போது பரமேஸ்வரியை யார் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்தார்கள்? என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும் மயங்கிய நிலையில் இருந்த கணவரிடமும் போலீஸார் துருவி துருவி தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE