திருச்சியில் போக்குவரத்து காவலரை மிரட்டிய பெண் கைது

By KU BUREAU

திருச்சி: திருச்சி மாவட்டம் நம்பர் 1 டோல்கேட் பகுதியில் செப்.15-ம் தேதி போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவலர் அரசு, பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, திருச்சி பாலக்கரை பகுதியைச் சேர்ந்த கிரிஜா, காவலர் அரசிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவதூறாக பேசியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து காவலர் அரசு அளித்த புகாரின் பேரில், பணி செய்யவிடாமல் தடுத்தல், தகாத வார்த்தைகளில் திட்டி, தாக்கி மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கொள்ளிடம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கிரிஜாவை கைது செய்து, காந்தி மார்க்கெட் அருகேயுள்ள மகளிர் தனிச் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், சிறைக் காவலர்களிடமும் தகராறு செய்ததாக காந்தி மார்க்கெட் போலீஸார் 3 பிரிவுகளின் கீழ் கிரிஜா மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE