சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு லாரியில் வந்த ரூ.3.68 லட்சம் மின்கம்பிகள் மாயம்: போலீஸ் விசாரணை

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரிக்கு லாரியில் சென்னையிலிருந்து வந்த ரூ.3.68 லட்சம் மதிப்புள்ள மின்கம்பிகள் மாயமானது குறித்து போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை அண்ணா நகரை சேர்ந்தவர் கலைச்செல்வன் (28). இவர் தனியார் பார்சல் சேவை நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்திலிருந்து விழுப்புரம், புதுச்சேரியில் கடைகளுக்கு எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. அதனை லாரியில் ஏற்றிக்கொண்டு விழுப்புரத்தை சேர்ந்த ஓட்டுநர் முருகன் புதுச்சேரி வந்துள்ளார். அதன்பின் அவர் கடைக்காரர்களிடம் பார்சல்களை ஒப்படைத்தார்.

இந்தநிலையில் மோகன்ராஜ் என்பவருக்கு வந்த பார்சலில் அனுப்பப்பட்டிருந்த ரூ.3.68 லட்சம் மதிப்புள்ள 22 மின் வயர்கள் மாயமாகி இருந்தன. அதனால், அதிர்ச்சி அடைந்த அவர், இது குறித்து பார்சல் நிறுவனத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக முதலியார்பேட்டை காவல் நிலையத்திலும் கலைச்செல்வன் புகார் அளித்தார். அதன்படி லாரி ஓட்டுநர் முருகனிடம் விசாரித்துவருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE