சிதம்பரம் வழிப்பறி வழக்கு: பிரபல சென்னை ரவுடி கூட்டாளிகளுடன் கைது

By க. ரமேஷ்

கடலூர்: சிதம்பரம் அண்ணாமலை நகர் வழிப்பறி வழக்கில் பிரபல சென்னை ரவுடி கூட்டாளிகளுடன் கைது செய்யப்பட்டார்.

சென்னையில் பிரபல ரவுடியாக இருக்கும் நெற்குன்றம் சூர்யாவின் நெருங்கிய கூட்டாளியும் நான்கு பேரை கொலை செய்த வழக்குகள், ஏழு கொலை முயற்சி வழக்குகள் உட்பட பல வழக்குகள் கொண்ட நவீன் என்கின்ற பூச்சி என்கின்ற ரத்ன சபாபதி (30), சிதம்பரம் நகரில் போக்கிரி பதிவேட்டில் உள்ள பாஸ்கர் (24) மற்றும் மணிகண்டன்(28), பாலகுரு(27) ஆகியோருடன் சேர்ந்து இன்று (செப்.14) காலை உசுப்பூர் ரயில்வே கேட் அருகே பழனிச்சாமி என்பவரிடம் ரூ.500 வழிப்பறி செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இது குறித்த தகவல் அறிந்த அண்ணாமலை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போது ரத்ன சபாபதி தப்பி ஓட முயற்சித்தார். அப்போது கீழே விழுந்ததில் அவரது கையில் முறிவு ஏற்பட்டது. போலீசார் அவரை பிடித்து மருத்துவமனையில் சிகிச்சை அளித்து கைது செய்து இன்று மாலை நான்கு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE