நர்ஸை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருத்துவர்: ஆணுறுப்பை பிளேடால் அறுத்து தப்பித்த அதிர்ச்சி!

By KU BUREAU

பீகார்: சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் செவிலியர் ஒருவர் மருத்துவரின் அந்தரங்க உறுப்பை பிளேடால் அறுத்த சம்பவம் பரபரப்பை உருவாக்கியுள்ளது. மருத்துவர் தனது இரண்டு கூட்டாளிகளுடன் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றபோது ​​தன்னைத் தற்காத்துக் கொள்ள இந்த செயலை செய்துள்ளார்.

பெகுசராய் மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் சஞ்சய் குமார் சஞ்சு, வைஷாலி மாவட்டத்தைச் சேர்ந்த சுனில் குமார் குப்தா மற்றும் மங்க்ரா பகுதியைச் சேர்ந்த அவதேஷ் குமார் ஆகியோர் மது அருந்திவிட்டு, போதையில் மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியரை பாலியல் ரீதியாக துன்புறுத்தத் தொடங்கினார்.

மருத்துவர் சஞ்சு செவிலியரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். இதனால் தன்னை தற்காத்து கொள்வதற்காக செவிலியர் அறுவை சிகிச்சை பிளேடை வைத்து மருத்துவரின் அந்தரங்க உறுப்பை அறுத்துவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றார்.

இதனையடுத்து சுனில் மற்றும் அவதேஷ் ஆகியோர் செவிலியரை துரத்திச் சென்றுள்ளனர். ஆனால் அவர் தப்பித்து, 112 என்ற அவசர எண்ணை டயல் செய்து காவல்துறைக்கு புகாரளித்தார். உடனடியாக எஸ்பி வினய் திவாரி தலைமையிலான போலீஸ் குழு சம்பவ இடத்துக்கு வந்து மருத்துவர் மற்றும் அவரது இரண்டு கூட்டாளிகளைக் கைது செய்தது. மேலும், குற்றம் நடந்த இடத்தில் இருந்து ரத்தக்கறை படிந்த ஆடைகள் மீட்கப்பட்டன.

காயமடைந்த மருத்துவர் தற்போது மருத்துவமனையில் போலீஸ் காவலில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த வழக்கை போலீஸார் தீவிரமாக விசாரித்து ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர்.


VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE