மதுரையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ மகன் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை

By என்.சன்னாசி

மதுரை: மதுரை அருகே அதிமுக முன்னாள் எம்எல்ஏ மகனை தாக்கிய சம்பவ குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் எம்.சத்திரப்பட்டி அருகிலுள்ள கருவனூரைச் சேர்ந்தவர் பொன்னம்பலம். அதிமுக முன்னாள் எம்எல்ஏ-ஆன இவரது மகன் தில்லையம்பலம். அதே ஊரைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்கெனவே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் விஷேச வீட்டில் வைத்து இருதரப்பினரும் மோதிக் கொண்டதில் தில்லையம்பலம் தாக்கப்பட்டார். அவருக்கு காலில் வெட்டு விழுந்துள்ளது.

மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக எம்.சத்திரபட்டி காவல் நிலையத்தில் தில்லையம்பலம் கொடுத்த புகாரின் பேரில், வேல்முருகன் உட்பட அவரது தரப்பைச் சேர்ந்த 9 பேர் மீதும், வேல்முருகன் கொடுத்த புகாரில் தில்லையம்பலம் உட்பட 6 பேர் மீதும் காவல் ஆய்வாளர் சாந்தி வழக்குப் பதிவு செய்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE