விநாயகர் சிலை கரைப்பின்போது குளத்தில் மூழ்கி சிறுவன் பலி - 4 சிறுவர்கள் மீட்பு; பண்ருட்டியில் அதிர்ச்சி

By ந.முருகவேல்

பண்ருட்டி: பண்ருட்டி அருகே இன்று விநாயகர் சிலை கரைப்பின் போது உடன் சென்ற சிறுவர்கள் 5 பேர் நீரில் மூழ்கியதில் ஆதி கிருஷ்ணன் என்ற சிறுவன் உயிரிழந்தார். 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

விநாயகர் சதுர்த்தி முடிந்து 3ம் நாளான இன்று விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சி ஆங்காங்கே நடைபெற்றது. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணை நல்லூரை அடுத்த ஆனத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 5 சிறுவர்கள், விநாயகர் சிலையை கரைக்க நேற்று கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த நத்தம் ராமர் குளத்திற்கு எடுத்துச் சென்று கரைக்க குளத்தில் இறங்கியதாகக் கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக 5 சிறுவர்களும் நீரில் மூழ்கி உயிருக்கு போராடியுள்ளனர்.

அப்போது அவ்வழியாக சென்றவர்கள், 5 பேரையும் மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மயக்க நிலையில் இருந்த 5 பேரையும் போலீஸார் பரிசோதித்த போது, ஆதி கிருஷ்ணன் (12) என்ற சிறுவன் உயிரிழந்ததாகவும், மற்ற நால்வரும் சிகிச்சையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக புதுப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE