வாரிசு சான்றிதழ் தர ரூ.2,000 லஞ்சம்: வருவாய் ஆய்வாளர் கைது @ திருப்புவனம்

By இ.ஜெகநாதன்

திருப்புவனம்: திருப்புவனம் அருகே வாரிசு சான்றுக்கு ரூ.2,000 லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பசியாபுரத்தைச் சேர்ந்தவர் வசந்த் (35). இவர் வாரிசு சான்றிதழ் கேட்டு வருவாய்த் துறையில் விண்ணப்பம் செய்திருந்தார். இந்நிலையில் வாரிசு சான்றிதழில் கையொப்பமிட கொந்தகை வருவாய் ஆய்வாளர் முத்துமுருகன் ரூ.2,000 லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. லஞ்சம் தர விருப்பமில்லாத வசந்த், இது குறித்து சிவகங்கை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரிடம் புகார் செய்தார்.

போலீஸாரின் ஆலோசனைபடி ரசாயன பவுடர் தடவிய ரூ.2,000யை வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளர் முத்து முருகனிடம் வசந்த் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி ஜான் பிரிட்டோ, உதவி ஆய்வாளர் ராஜா முகமது தலைமையில் போலீஸார் முத்து முருகனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE