திருப்பரங்குன்றத்தில் பிஎஸ்எப் வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மதுரை - பாம்பன் நகர் பகுதியில் ஓய்வு பெற்று ஆறு மாதமே ஆன முன்னாள் பி.எஸ்.எப் வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.

அந்த பகுதியின் குமரன் தெரு பகுதியில் சேர்ந்த மகேந்திரன் இவரது மகன் சிவராமன் (40) இவருக்கு பிரபாவதி என்ற மனைவி, 2 மகன்கள் உள்ளனர். இந்திய எல்லை பாதுகாப்பு வீரராக (பி‌.எஸ்.எப்) கடந்த 22 ஆண்டுகள் பணியாற்றி, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றார்.

மது குடிக்கும் பழக்கமுள்ள சிவராமன் வீட்டில் குடிக்க பணம் கேட்டு தொல்லை செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவரது மனைவியை பிரபாவதி அவனியாபுரம் காவல் நிலையத்தில் ஏற்கனவே புகார் ஒன்று கொடுத்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் இன்று குடிபோதையில் இருந்த சிவராமன் வீட்டில் வைத்திருந்த துப்பாக்கியால் தனக்கு தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இத் தகவல் அறிந்து வந்த அவனியாபுரம் காவல்துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE