பகீர்... பைக் ஏற்றி சிறுவன் கொலை... போதை ஆசாமி வெறிச்செயல்!

By எம்.சகாயராஜ்

சிகரெட் வாங்கித் தர மறுத்த சிறுவனை போதை ஆசாமி தாக்கியதோடு, பைக் ஏற்றி கொலை செய்த சம்பவம் கிருஷ்ணகிரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம், பாஞ்சாலையூர் கிராமத்தைச் சேர்ந்த இர்ஃபான் என்ற சிறுவன் அரசு மதுபான கடையின் அருகே நடந்து சென்றிருக்கிறார். அப்போது மது போதையில் இருந்த ஒருவர், சிறுவன் இர்ஃபானியிடம் சிகரெட் வாங்கி வருமாறு கூறியிருக்கிறார். ஆனால் சிறுவன் சிகரெட் வாங்கி கொடுக்க மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த போதை ஆசாமி, சிறுவனை கடுமையாக தாக்கியதோடு இரு சக்கரத்தை வாகனத்தை சிறுவன் மீது ஏற்றி உள்ளார். இதில் சிறுவன் இர்ஃபான் பலத்த காயமடைந்தார்.

இதையடுத்து மருத்துவமனைவியில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் இர்ஃபான் சிகிச்சைப் பலனளிக்காமல் நேற்று உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து சிறுவனின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. தகவல் அறிந்து காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குற்றவாளியை கைது செய்வதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலை அவர்கள் கைவிட்டனர். மேலும் மதுபான கடையை இங்கிருந்து மாற்ற வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சிகரெட் வாங்கித் தர மறுத்த சிறுவன் பைக் ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரி பகுதி மக்களை பதறவைத்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE