மனைவியை மிரட்டுவதற்கு தீக்குளித்த திரைத் துறை ஊழியர் மரணம் @ மதுரை

By என்.சன்னாசி

மதுரை: மதுரையில் மனைவியை மிரட்ட விளையாட்டாக தீக்குளித்த முயன்ற திரைப்படத்துறை ஊழியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மதுரை மாவட்டம் அரிசிகாரத் தெருவைச் சேர்ந்தவர் நீலமேகம் (64). திரைப்பட விநியோகஸ்தர்களிடம் வேலை செய்து வந்தார். இவர், புதிய படங்கள் திரையரங்குகளில் திரையிடப்பட்டிருக்கும்போது, பல்வேறு ஊர்களுக்கு சென்று ரசிகர்களின் கூட்டம், டிக்கெட், வசூல் விவரம் குறித்த தகவல்களை சேகரிக்கும் ஊழியராக இருந்துள்ளார். மது குடிப்பழக்கமுள்ள இவர், 15 நாளுக்கு ஒரு முறை வீட்டுக்கு வந்து செல்வதாக கூறப்படுகிறது.

இவர் வீட்டிற்கு வரும் நேரங்களில், தேவையின்றி மனைவியுடன் தகராறும் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மனைவியை மிரட்ட நிலைத்து தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி விளையாட்டாக தீ குளிப்பது போன்று நடித்துள்ளார். இதில் எதிர்பாராதவிதமாக உடலில் தீ பற்றி எரிந்ததால் சம்பவ இடத்திலேயே நீலமேகம் உயிரிழந்துள்ளார். இதனிடையே, இச்சம்பாம் குறித்து நீலமேகத்தின் மனைவி சுமதி கொத்த புகாரின்பேரில், திடீர் நகர் காவலர்கள்விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE