பாலியல் தொல்லை - விருதுநகரில் போக்சோ வழக்கில் தந்தை கைது

By KU BUREAU

விருதுநகர்: விருதுநகர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். விருதுநகர் பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் பிளஸ் 2 படித்து வருகிறார். இந்த மாணவிக்கு அவரது தந்தையே பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப் படுகிறது.

இதுகுறித்து தனது பள்ளித் தலைமை ஆசிரியரிடம் மாணவி தெரிவித்தார். அதையடுத்து, மாவட்ட குழந்தைகள் நல அலுவலரிடம் புகார் தெரிவிக் கப்பட்டது. இதுகுறித்து விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளிக்கப் பட்ட புகாரின்பேரில், போலீஸார் போக்சோ வழக்குப் பதிந்து மாணவியின் தந்தையை கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE