பெரியகுளம் அருகே பெண்ணின் மண்டை ஓடு, எலும்புகள் மீட்பு

By என்.கணேஷ்ராஜ்

பெரியகுளம்: பெரியகுளம் அருகே காட்டுப் பகுதியில் பெண்ணின் மண்டை ஓடு, எழும்புகளை மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் மேல்மங்கலம் அருகே ஒத்தவீடு எனும் இடம் உள்ளது. இங்குள்ள காட்டுப் பகுதியில் ஆடு மேய்ப்பவர்கள் நேற்று மண்டையோடு கிடப்பதை பார்த்ததாக கூறப்படுகிறது. மேலும், அருகிலேயே சில எலும்புகளும் கிடந்துள்ளது. இது குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தேவதானப்பட்டி காவல் ஆய்வாளர் அப்துல்லா தலைமையிலான போலீஸார் நேரில் ஆய்வு செய்தனர்.

அப்போது, மண்டையோடு, 3 எலும்புகள், சேலை மற்றும் பெண்கள் அணியும் செருப்பு ஆகியவை கிடந்துள்ளது. இவற்றை கைப்பற்றிய தடயவியல் போலீஸார் ஆய்வு செய்தனர். இதில் மண்டையோடு சேதமடையாமல் இருந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எழும்புகள் ஆய்வுக்காக அனுப்பப்பட்டது.

இது குறித்து போலீஸார் கூறுகையில், "அருகில் சுடுகாடு எதுவும் இல்லை. மழைக்கு ஏற்பட்ட மண் அரிப்பில் புதைந்திருந்த மண்டை ஓடு வெளியில் தெரிந்துள்ளது. இது சென்னையில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட உள்ளது. இதன் முடிவுகள் வந்ததும் அடுத்தக் கட்ட விசாரணை தொடரும். தற்போது காணாமல் போன பெண்கள் குறித்த விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது என்று போலீஸார் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE