ரயில் தண்டவாளத்தில் பாம்பு மாத்திரையை கொளுத்தி போட்டு புகைமண்டலத்தை ஏற்படுத்தி வீடியோ வைரலான நிலையில், அவர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வலுத்து வருகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் அருகே தண்ட்ரா என்ற ரயில் நிலைய தண்டவாளத்தில் யூடியூபர் ஒருவர் பாம்பு மாத்திரைகளை கொளுத்தி அதனை வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், இதுபோன்ற செயல்கள் ரயில் விபத்துக்கு வழிவகைக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ள ரயில்வே பாதுகாப்பு படை,
வீடியோவின் அடிப்படையில் 145 மற்றும் 147 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் தற்போதுவரை கைது மேற்கொள்ளப்படவில்லை என்றாலும் அபராதம் விதிக்கவும் வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
கனமழை... இன்று 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!
இன்று முதல் 3 நாட்களுக்கு மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு!
உஷார்... இன்று முதல் இந்த வழித்தடங்களில் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது!
தொடங்கியது லாரிகள் வேலை நிறுத்தம்... சரக்கு போக்குவரத்து கடும் பாதிப்பு!