ஓசூரில் குடிபோதையில் தகராறு செய்த தொழிலாளியை கொன்ற மனைவி கைது

By KU BUREAU

ஓசூர்: ஓசூரில் குடிபோதையில் தகராறு செய்த கணவரை கழுத்தை நெரித் துக் கொலை செய்த மனைவியை போலீஸார் கைது செய்தனர். தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே ஏரியூரைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (46). இவர் கல் உடைக்கும் கூலித் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவரது மனைவி நந்தினி (35). இவர்களுக்கு 17 வயதில் மகளும், 15 வயதில் மகனும் உள்ளனர். இவர்கள் ஓசூரில் ராயக்கோட்டை சாலையில் உள்ள ஹவுசிங் போர்டு பகுதியில் குடியிருந்து வருகின்றனர்.

கோவிந்தராஜிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால், தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு போதையில் வந்த கோவிந்தராஜ், நந்தினியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த நந்தினி, கோவிந்தராஜைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்தார்.

தகவல் அறிந்து அங்கு வந்த ஓசூர் நகர போலீஸார், கோவிந்தராஜின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காகஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து நந்தினியைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE