நகை பாலீஷ் போடுவதாகக் கூறி மயக்க மருந்து தூவி பெண்ணிடம் நகை திருட்டு @ ஒரத்தநாடு

By KU BUREAU

தஞ்சாவூர்: ஒரத்தநாடு அருகே உள்ள பூவத்தூர் ஊராட்சி பொட்டலங்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமதாஸ். பிளம்பரான இவர், நேற்று வேலைக்குச் சென்ற பிறகு, இவரது மனைவி சகுந்தலா தேவி(38) வீட்டில் தனியாக இருந்தார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த வடமாநில இளைஞர்கள் 2 பேர், சகுந்தலா தேவியிடம் குடிக்க நீர் கேட்டுள்ளனர். பின்னர், நகைகளை பாலீஷ் செய்து தருவதாகக் கூறியுள்ளனர். இதை நம்பி, 2 பவுன் சங்கிலியை சகுந்தலா தேவி அவர்களிடம் கொடுத்துள்ளார்.

அப்போது, நகையை அவர்கள் பாலீஷ் செய்வதுபோல, திடீரென சகுந்தலா தேவியின் முகத்தில் மயக்க மருந்தை பொடியைத் தூவியுள்ளனர். இதில், சகுந்தலா தேவி மயக்கம் அடைந்துள்ளார். இதையடுத்து, 2 பவுன் நகையுடன் இந்த இளைஞர்கள் தப்பிவிட்டனர்.

சிறிது நேரத்துக்குப் பிறகு மயக்கம் தெளிந்து சகுந்தலா தேவி எழுந்தபோது, நகையை திருடிச் சென்றுவிட்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் ஒரத்தநாடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE