பெண்ணை கொன்று அமராவதி ஆற்றில் சடலம் வீச்சு - போலீஸார் விசாரணை

By KU BUREAU

மடத்துக்குளம்: மடத்துக்குளம் அருகே அமராவதி ஆற்றில் ரத்த காயங்களுடன், வாயில் துணி கட்டப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மிதப்பதாக மடத்துக்குளம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு போலீஸார் விரைந்து சென்று சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், அப்பெண் கொழுமம் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சேகர் என்பவரது மனைவி சாரதா (30) என்பதும், இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளதும் தெரியவந்தது.

சாரதாவை மர்மநபர்கள் கொலை செய்து, சடலத்தை ஆற்றில் வீசிச் சென்றிருக்கலாம் என மடத்துக்குளம் போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக வழக்கு பதிந்து, மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE