விஷம் வைத்த பிரியாணியை உட்கொண்ட 7 மயில்கள், 6 ஆடுகள் உயிரிழப்பு @ கோவை

By KU BUREAU

கோவை: கோவை மாவட்டம் காரமடை பகுதியில் விஷம் வைத்த பிரியாணியை உட்கொண்ட 7 மயில்கள், 6 ஆடுகள் உயிரிழந்தன. காரமடை அருகில் உள்ள குமரன்குன்று முருகன் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் மயில்கள் உயிரிழந்து கிடப்பதாக, காரமடை வனச்சரக அலுவலகத்திற்கு நேற்று தகவல் கிடைத்தது.

அதன்பேரில் வனச்சரகர் ரஞ்சித் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். முருகன் கோயில் நிலத்தில் பிரியாணியில் விஷம் வைத்த உணவை உட்கொண்ட 7 மயில்கள், 6 ஆடுகள் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.

இதுகுறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வனக்கால்நடை மருத்துவர் சுகுமார் தலைமையில் உயிரிழந்த மயில்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வனப்பகுதியில் புதைக்கப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE