நள்ளிரவில் பரபரப்பு... ஓசூரில் துப்பாக்கி முனையில் அமுக்கப்பட்ட கோழி அருள்!

By காமதேனு

பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த கோழி அருளை, ஓசூரில் வைத்து துப்பாக்கி முனையில், அம்பாசமுத்திரம் போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியைச் சேர்ந்தவர் கோழி அருள் என்ற அருள்ராஜ். 50 வயதாகும் கோழி அருள், தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடையவர். அருள் மீது 20-க்கும் மேற்பட்ட கொலை கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது.

கோழி அருள்

இவர் மீது அம்பாசமுத்திரம் போலீஸார் பதிந்த வழக்கு ஒன்றில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அருளை தனிப்படை போலீஸார் தேடி வந்தனர். இந்த நிலையில், அருள் ஓசூர் பகுதியில் தலைமறைவாக இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஓசூர் விரைந்த அம்பை போலீஸார், அங்கே பதுங்கி இருந்த அருளை துப்பாக்கி முனையில் நள்ளிரவில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அருளை நீதிமன்றத்தில் ஆஜர்படுதுவதற்காக போலீஸார் அம்பை அழைத்து வந்தனர்.

இதையும் வாசிக்கலாமே...

நாளை தமிழகத்திற்கு 'ஆரஞ்சு' அலர்ட்!

திமுக அமைச்சர் எ.வ.வேலுக்குச் சொந்தமான 40 இடங்களில் ரெய்டு!

சிறையில் இனி கைதிகளைப் பார்க்க ஆதார் கட்டாயம்!

இன்று 11 தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை மையம் எச்சரிக்கை!

குட்நியூஸ்: இன்று முதல் 600 சிறப்புப் பேருந்துகளை இயக்க அரசு முடிவு!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE